Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3265 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3265திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார்.) 6
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6
இகல் கொள் புள்ளை பிளந்ததும்,Igal kol pullai pilandathum - விரோதபுத்தியுடன் வந்த பகாசுரனை வாய்பிறந்து முடித்ததென்ன
இமில் ஏறுக்ள் செற்றதுவும்,Imil erukal setrathuvum - பிசலையுடைய எருதுகளை (நப்பின்னைக்காகக்) கொன்றதென்ன
உயர் கொள் சோலைகுருத்து ஒசித்ததும்,Uyar kol solaikuruthu osithathum - உயர்ச்சியைக் கொண்ட சோலையிலுள்ள குருந்த மரத்தை முறித்ததென்ன
உட்பட மற்றும்,Utpad matrum - இவை முதலாக மற்றும் பலவான
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Akal kol vaiyam alandha maayan en appan than maayangale - பூமிப்பரப்பை யெல்லாம் அளந்துகொண்ட மாயனான எம்பெருமானுடைய அற்புதச் செயல்களையே
பகல் இரா பரவ பெற்றேன்,Pagal ira parava petren - பகலும் இரவும் துதிக்கப்பெற்றேன்
எனக்கு என்ன மனம் பரிப்பு,Enakku enna manam parippu - இன எனக்கென்ன மனத்துயரமுளது