Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3268 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3268திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (வைதிகன் பிள்ளைகள் மீட்டுக்கொடுத்த தென்பது கண்ணபிரானுடைய சரிதைகளில் ஒன்று அதனை இப்பாட்டில் அநுபவிக்கிறார்.) 9
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9
ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் கலக்க,Ez kadhal ez malai ez ulagum kalakka - ஏழுகடல்களும் ஏழுமலைகளும் ஏழுலகங்களாமெல்லாம் கலங்கும் படியாக
கழய கடாய்,Kazhaya kadaay - அண்ட கடாஹத்துகு அப்பாலே போம்படி யாக நடத்தி
தேர் கொடு,Ther kodu - தேரைக்கொண்டு
உலக்க சென்ற மாயமும்,Ulakka sendra maayamum - முடியச்சென்ற ஆச்சரியமும்
உட்பட மற்றும் பல,Utpad matrum pala - இதுமுதலாக மற்றும் சேஷ்டிதங்களையும் (பேசி)
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைமால் வண்ணனை,Valakkai aal idakai sangam ivai udaimaal vannanai - உபணஹஸ்தங்களிலும் திருவாழி திருச்சங்கையுடையனாய் நீலவண்ணனான எம்பெருமானை
மலக்கும் நா உடையேற்கு,Malakkum naa udaiyerkku - ஸ்வாதீனப் படுத்திக்கொள்ளும்படியான நாவிறுபடைத்த எனக்கு
இ மண்ணின் மிசைமாறு உளதோ,eMannin misaimaaru ulatho - இவ்வுலகின் எதிருண்டோ,