Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3269 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3269திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார்) 10
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10
மண் மிசை பெருபாரம் நீங்க,Mann misai perubaaram neenga - பூமியின்மேலிருந்த பெருஞ்சுமை தொலையும் படியாக
ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி ,OrBharatha maa perum por panni - மஹாபாரத யுத்தத்தை யுண்டாக்கி
மாயங்கள் செய்து,Maayangal seidhu - ஆச்சரியச் செயல்களைச் செய்து
சேனையை பாழ்பட நூற்றிட்டு,Senaiyai paalpada noottrittu - எல்லாச்சேனையும் பாழ்படும்படி ஸங்கல்பித்து முடித்து
போய்,Poi - இவ்விடம்பிட்டுப் புற பிட்டு
விண் மிசை தன தாமமே புக மேவிய,Vin misai than thaamame puga meviya - பரமாகரசத்திலே தன்னுடைய ஸ்தான விசேஷத்திலே சென்று பொருந்தின.
சோதி தன் தாள்,Sothi than thaal - பரஞ்சோதிப்பெருமானுடைய திருவடிகளை
நான் நண்ணி வணங்கப்பெற்றேன்,Naan nanni vanangappetren - நான் கிட்டி வணங்கப் பெற்றேன்.
எனக்கு பிறர் நாயகர் ஆர்,Enakku pirar naayakar aar - எனக்கு வேறு நியாமகர் ஆர் (ஆருமில்லை)