திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3270 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3270திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார்.) 11
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன் வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம் கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11
பதவுரை Show / Hide
முழு ஏழ் உலகுக்கும் நாயகன் அய்,Muzhu ez ulagukkum naayagan ai - எல்லா வுலகங்களுக்கும் நிர்வாஹகனாகி
முழு ஏழ் உலகும் தன் வாயகம் புகவைத்து உமிழ்ந்து,Muzhu ez ulagukkum than vaayagam pugavaithu umizhndhu - அந்த ஸகல்லோகங்களையும் (ப்ரளயம்கொள்ளாதபடி) தன் வாய்க்குள்ளே புகவிட்டுப் பிறகு வெளிப்படுத்தி.
அவை ஆய்,Avai ai - அவை தானேயாய்
அவை அல்லனும்,Avai allanum - அவற்றின் படியே யுடையனல்லாதவனுமான
கேசவன்,Kesavan - எம்பெருமானுடை
அடி இணை மிசை,Adi inai misai - உபயபாதங்கள் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன,Kurugoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச்செய்த
தூய ஆயிரத்து,Thooya aayiraththu - பரிசுத்தமான ஆயிரத்துள்ளே
துவள் இன்றி பக்தர் ஆவர்,Thuval indri bakthar aavar - அநந்யப்ரயோஜந பக்தி மான்களாகப் பெறுவர்கள்.