திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3274 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருத் தொலை வில்லி மங்கலத்தையும் -அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமஷ்டியையும் யாதொருநாள் கண்டாள்-அன்று தொடங்கி தடை நிற்கை தவிர்ந்தாள் என்கிறாள் .) 4 | நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.–6-5-4 | பதவுரை Show / Hideஅன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள் நிற்கும் நால்மறை வாணர் வாழ்,Nirkum naalmarai vaanar vaazh - ஸ்திரமான நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்கள் வாழுமிடமான துலைவில்லிமங்கலம் கண்ட பின்,Tholaivillimangalam kanda pin - துலைவில்லித்திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற பின்பு அற்கம் ஒன்றும் அற உறாள்,Arkam ondrum ara ural - அடக்கம் சிறிதுமுடையளல்லளாய் மலிந்தாள் கண்டீர்,Malindhaal kandeer - கைகழிந்துவிட்டாள் காண்மின் (அது எங்ஙனம் தெரிகிறதென்றால்) கற்கும் கல்வி எல்லாம்,Karkum kalvi ellam - இவள் பழகுகிற பேச்சுக்களெல்லாம் கரு கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே,Karu kadal vannan kannapiran endrae - நீலக்கடல்வண்ணானான கண்பிரானைப் பற்றியதேயாம். ஒற்கம் ஒன்றும் இலள்,Orkkam ondrum ilal - ஒடுக்கம் சிறிதுமில்லாதவளாய் உகந்து உகந்து உள் மகிழ்ந்து,Ugandhu ugandhu ul magizhndhu - தன்னுடைய ஆனந்தமிகுதியை நன்றாகக் காட்டிக்கொண்டு குழையும்,Kuzhaiyum - உள்குழையாநின்றாள். |