| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3275 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் திருத் தொலை வில்லி மங்கலத்திலே இருக்கிற அரவிந்த லோசனனுடைய ஒப்பனை அழகைக் காட்டினீர் – அன்று தொடக்கமாக இவள் விக்ருதையாகா நின்றாள் என்கிறாள்.) 5 | குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர் மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள் நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! குழையும்,Kuzhaiyum - பகவத்குணங்களிலே உருக்கமுடையவளாயும் வாள் முகத்து,Vaal mugathu - ஒளிமிக்க முகத்தையுடையவளாயிருக்கிற துலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு,Tholaivillimangalam kondu pukku - துலைவில்லித்திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போய் இழை கொள் சோதி,Izhaik kol sothi - திருவாபரணங்களினாலான சோதியை யுடையனும் செம் தாமரை கண்ணபிரான்,Sem thamarai kannapiran - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எம்பெருமான் இருந்தமை,Irundhamai - வீற்றிருக்கும்படியை காட்டினீர்,kaattineer - நீங்களேகாட்டிக்கொடுத்தீர்கள், இவள்,Ival - அதுகாணப்பெற்றவிவள் அன்று தொட்டும்,Andru thottum - அந்நாள் தொடங்கி மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு,Mazhai peithaal okkum kanna neerinodu - மழைபெய்தாற்போன்ற கண்ணீரோடேகூடி மையாந்து,Maiyaanthu - வியாமோஹித்து நுழையும் சிந்தையன்,Nuzhaiyum sinthaiyan - அவனழகிலேஉள்புகுழைந்தநெஞ்சையுடையளாய் அத் திசை உற்று நோக்கி தொழும்,Ath thisai uttru nokki thozhum - அத்திருப்பதியுள்ள பக்கமே உற்றுநோக்கித் தொழுகின்றாள். |