Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3275 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3275திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் திருத் தொலை வில்லி மங்கலத்திலே இருக்கிற அரவிந்த லோசனனுடைய ஒப்பனை அழகைக் காட்டினீர் – அன்று தொடக்கமாக இவள் விக்ருதையாகா நின்றாள் என்கிறாள்.) 5
குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
குழையும்,Kuzhaiyum - பகவத்குணங்களிலே உருக்கமுடையவளாயும்
வாள் முகத்து,Vaal mugathu - ஒளிமிக்க முகத்தையுடையவளாயிருக்கிற
துலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு,Tholaivillimangalam kondu pukku - துலைவில்லித்திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போய்
இழை கொள் சோதி,Izhaik kol sothi - திருவாபரணங்களினாலான சோதியை யுடையனும்
செம் தாமரை கண்ணபிரான்,Sem thamarai kannapiran - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எம்பெருமான்
இருந்தமை,Irundhamai - வீற்றிருக்கும்படியை
காட்டினீர்,kaattineer - நீங்களேகாட்டிக்கொடுத்தீர்கள்,
இவள்,Ival - அதுகாணப்பெற்றவிவள்
அன்று தொட்டும்,Andru thottum - அந்நாள் தொடங்கி
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு,Mazhai peithaal okkum kanna neerinodu - மழைபெய்தாற்போன்ற கண்ணீரோடேகூடி
மையாந்து,Maiyaanthu - வியாமோஹித்து
நுழையும் சிந்தையன்,Nuzhaiyum sinthaiyan - அவனழகிலேஉள்புகுழைந்தநெஞ்சையுடையளாய்
அத் திசை உற்று நோக்கி தொழும்,Ath thisai uttru nokki thozhum - அத்திருப்பதியுள்ள பக்கமே உற்றுநோக்கித் தொழுகின்றாள்.