| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3276 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் சம்ருத்தமான திருத் தொலை வில்லி மங்கலத்தைக் கண்டால் -வேறொன்றும் காண மாட்டாதே எப்போதும் இவள் வாய் விடும் சொல் எல்லாம் ஸூக்ரஹ ஸுந்தர்யனானவனுடைய திரு நாமங்களேயாய் இரா நின்றது என்கிறாள்.) 6 | நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம் நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும் வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! நோக்கும் பக்கம் எல்லாம்,Nokkum pakkam ellam - பார்த்த பார்த்த விடமெல்லாம் ரும்பொடு செந்நெல் ஒங்கு,Rum podu sennel oongu - கரும்பும் செந்நெற்பயிர்களும் உயர்ந்து விளங்கப்பெற்றதும் செம் தாமரை வாய்க்கும்,Sem thamarai vaaykkum - செந்தாமரைகள் நிரம்பப்பெற்றதும் தண்,Than - குளிர்ந்ததுமான பொருநல்,Porunal - தாமிரபரணிநதியினுடைய வடகரை,Vadakarai - வடகரையிலேயுள்ளதாய் வண்,Van - சகலவிதமான அழகும் பொருந்தியதான துலைவில்லி மங்கலம்,Tholaivilli mangalam - துலைவில்லித் திருப்பதியை நோக்கும் எல்,Nokkum el - (இப்பெண்பிள்ளை) பார்தாளாகில் அத் திசை அல்லால் மறுநோக்கு இலள்,Ath thisai allal maru nokku ilal - அந்தத் திக்கு ஒன்று தவிற வேறெவ்விடத்தும் நோக்குடையவல்ளல் வைகல் நாள் தொறும்,Vaigal naal thorum - ஒரு நொடிப்பொழுதும் விச்சேதமில்லாமல் ஸகலகாலமும் இவள் வாய்கொள் வாசகமும்,Ival vaaykol vaasagamum - இவளது வாக்கில் வெளிவருகின்ற சொற்களும் மணிவண்ணன் நாம்மே,Manivannan naamme - நீலமணிவண்ணனான எம்பெருமானுடைய திருநாமங்களேயாம். |