| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3277 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-5-7- அநந்தரம் -மஹா உபகாரனான சர்வேஸ்வரன் இவளுக்குப் பண்ணின அதிசயம் இருந்த படி -வேறொரு வார்த்தையும் கேளாதே – அவனுடைய திவ்ய சிஹ்னங்களும் திரு நாமங்களும் தாம் திருந்தும்படி இவள் வாக் விஷயமாயிற்று என்கிறாள்.) 7 | அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால் முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ? அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! அணி மா மயில் சிறு மான் இவள்,Ani maa mayil siru maan ival - அழகிற் சிறந்த மயில்போன்றும் சிறிய மான்பேடை போன்றுமிராநின்ற இப்பெண்பிள்ளை நம்மை கைவலிந்து,Nammai kaivalinthu - நம்மைக் கைவிட்டொழிந்து துலைவில்லிமங்கலம் என்று அல்லால் என்ன வார்த்தையும் கேட்க உறாள்,Tholaivillimangalam endru allal enna vaarthaiyum ketka ural - துலைவில்லித் திருப்பதிப் பேச்சுதவிர வேறு எந்தப்பேச்சும் கேட்க விரும்புகின்றிலள் (இப்படியானவிது) மூன்காம் நோற்ற விதி கொலோ,Moonkaam notra vidhi kolo - முன்பு செய்த ஸுக்ருத பலனோ! முகில்வண்ணன் மாயம் கொலோ,Mugilvannan maayam kolo - மேகவண்ணனான எம்பெருமானுடைய ஸங்கல்பமோ! அவன் சின்னமும் திரு நாமமும்,Avan sinnammum thiru naamamum - அப்பெருமானுடைய லக்ஷணங்களும் திருநாமங்களும் திருத்த இவள் வாயனகள் ஏ,Thirutha ival vaayanakal e - மிகத் திருத்தமாக இவளுடைய வாகில் விளங்கும்படி என்னே! |