| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3278 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அன்று தொடங்கி என்றும் அரவிந்த லோசனன் என்கிற திரு நாமத்தையே சொல்லி சிதிலையாகா நின்றாள் -என்கிறாள்.) 8 | திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம் கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும் இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம்,Thirundhu vedhamum velviyum thirumaa makalirum thaam - பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை மலிந்து இருந்து வாழ்,Malindhu irundhu vaazh - நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய் பொருநல் வடகரை,Porunal vadakarai - தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய் வண்,Van - தர்சநீயமான தொலைவில்லிமங்கலம்,Tholaivillimangalam - தொலைவில்லித் திருப்பதியை கரு தட கண்ணி,Karu tada kanni - கறுத்துப்பெருத்த கண்களைடையளான இப்பெண்பிள்ளை கை தொழுத அ நாள் தொடங்கி இ நாள் தோறும்,Kai thozhutha a naal thodangi i naal thorum - அஞ்ஜலிபண்ணினவன்று தொடங்கி இன்று வரையிலும் இருந்து இருந்து,Irundhu irundhu - இடையிடையே ஏங்கியேங்கியிருந்து அரவிந்த லோசன என்று என்றே,Aravinda lochana endru endrae - தாமரைக் கண்ணனை பலகாலு மழைத்து நைந்து இரங்கும்,Naindhu irangum - பலபடியாலும் சிதிலையாக நின்றாள். |