| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3280 | திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (பராங்குசநாயகியின் ப்ராவண்ய மிகுதியைக் கண்டு ‘இவள் பிராட்டிமாரிலே ஒருத்தியர்!‘ என்று சங்கிக்கின்றமை கூறுகிறது) 10 | பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள், என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால், முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம் சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.–6-5-10 | அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே! இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள் பின்னைகொல்,Pinnai kol - நப்பின்னைப் பிராட்டியோ! மா நிலம் மகள் கொல்,Maa nilam makal kol - பெருமைதங்கிய பூமிப்பிராட்டியோ! திருமகள் கொலபிறந்திட்டாள்,Thirumagal kola pirandhittaal - (அல்லது) ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷமியே வந்து பிறந்தபடியோ! என்ன மாயம் கொலோ,Enna maayam kolo - இது என்ன அதிசயமோ! நெடுமால் என்றே நின்று கூவும்,Nedumaal endrae ninru koovum - ஸர்வேச்வரா! என்று நிலை நின்று ழைக்கின்றாள், அவன் முன்னிவந்து நின்று இருந்து உறையும்,Avan munni vandhu ninru irundhu uraiyum - அப்பெருமான் முற்பட்டு வந்து நிற்பது இருபதாய் நித்யவாஸம் பண்ணுமிடமான துலைவில்லிமங்கலம,Tholaivillimangalam - துலைவில்லி திருப்பதியை சென்னியால் வணங்கும்,Senniyaal vanangum - தலையாலே வணங்குகின்றாள் அவ் ஊர் திரு நாமம் கேட்பதே சிந்தை,Av oor thiru naamam ketpathe sinthai - அத்திருப்பதியின் திரு காமத்தை (தன்வாயால் தான் சொல்வதிற் காட்டிலும்) பிறர் சொல்லக் கேட்க வேணுமென்பதே இவளது சிந்தனை. |