| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3283 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள்.) 2 | சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என் மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2 | சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு,Sangu vil vaal thandu chakkaram kaiyarkku - பஞ்சாயுதங்களையும் திருக்கையிலே உடையவரும் செம் கனி வாய் செய்ய தாமரை கண்ணற்கு,Sem kani vaai seyya thaamarai kannarkku - சிவந்த கனிபோன்ற அதரத்தையும் செந்தாமரைக் கண்களையுமுடையவரும் கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு,Kongu alar than am thuzhaai mudiyaanukku - தேனொழுகப் பெற்றுக் குளிர்ந்தழகிய தருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவருமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால் எள் மங்கை இழந்த்து,El mangai izhandhu - என்பெண்பிள்ளை யிழந்தது மாமை நிறம்,Maamai niram - அழகிய நிறமாம். |