Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3284 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3284திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (நிறங் கரியானுக்கு – நான் பிரிவாற்றாமையாலே உடம்பு வெளுத்துக் கிடக்க அவர் மேனி நிறம் குறியழியாமே பசுகுபசுகென்றிருக்கிற அழகு என்னே! என்று நைகின்றாளென்கை.) 3
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3
நிறம் கரியானுக்கு,Niram kariyaanukku - கருநிற முடையவரும்
நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய்,Needu ulagu unda thiram kilar vaai - (பிரளய காலத்தில்) ஸகல லோகங்களையும் அமுது செய்தபடி தோற்றுகிற திருப்ப வளத்தையுடையராய்க்கொண்டு
சிறு கள்வர் அவற்கு,Siru kalvar avarkku - சிறியவடிவிலே பெரியவுலகங்களை மறைத்துவைத்தவரும்
கறங்கிய சக்கரம் கையவனுக்கு,Karangiya chakkaram kaiyavanukku - சுழலும் திருவாழியைக் கையிலே உடையவருமான பெருமான் விளயத்தி லீடுபட்டதினால்
என் பிறங்கு இரு கூந்தல்,En pirangu iru koondhal - விளங்குகின்ற அடர்ந்த கூந்தலை யுடையளான என்மகள்
இழந்த்து பீடு,Izhandhu peedu - இழந்த்து பெருமையாம்.