| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3284 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (நிறங் கரியானுக்கு – நான் பிரிவாற்றாமையாலே உடம்பு வெளுத்துக் கிடக்க அவர் மேனி நிறம் குறியழியாமே பசுகுபசுகென்றிருக்கிற அழகு என்னே! என்று நைகின்றாளென்கை.) 3 | நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என் பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3 | நிறம் கரியானுக்கு,Niram kariyaanukku - கருநிற முடையவரும் நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய்,Needu ulagu unda thiram kilar vaai - (பிரளய காலத்தில்) ஸகல லோகங்களையும் அமுது செய்தபடி தோற்றுகிற திருப்ப வளத்தையுடையராய்க்கொண்டு சிறு கள்வர் அவற்கு,Siru kalvar avarkku - சிறியவடிவிலே பெரியவுலகங்களை மறைத்துவைத்தவரும் கறங்கிய சக்கரம் கையவனுக்கு,Karangiya chakkaram kaiyavanukku - சுழலும் திருவாழியைக் கையிலே உடையவருமான பெருமான் விளயத்தி லீடுபட்டதினால் என் பிறங்கு இரு கூந்தல்,En pirangu iru koondhal - விளங்குகின்ற அடர்ந்த கூந்தலை யுடையளான என்மகள் இழந்த்து பீடு,Izhandhu peedu - இழந்த்து பெருமையாம். |