| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3285 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகன் பண்பிழந்தாளாகக் கூறுகின்றாள் பண்பாவது இயற்கையான தன்மை எம்பெருமானது ஒரோ குணங்களை நினைத்து விகாரப்படுகின்றாளென்றவாறு.) 4 | பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு மாடுடை வையம் அளந்த மணாளற்கு நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4 | பீடு உடை நான்முகனை,Peedu udai naan muganai - பெருமைபொருந்திய பிரமனை படைத்தானுக்கு,Padaiththaanukku - (தனது திருநாபிக்கமலத்தில்) படைத்தவனும் மாடு உடை வையம்,Maadu udai vaiyam - வஸுமதியான பூமயை அளந்த மணாளற்கு,Alanda manaalarukku - (திரிவிக்கிரமனாகி) அளந்துகொண்ட மணவாளனும் நாடு உடை மன்னர்க்கு,Naadu udai mannarukku - நாட்டுக்கு கடவரான பாண்டவர்களுக்காக தூது செல் நம்பிக்கு,Thoothu sel nambikku - தூது சென்றவனுமான பெருமான் விஷயத்தி லீடுபட்டதனால் என் பாடு உடை அல்குல்,En paadu udai algul - பரந்தநிதம் பத்தையுடையளான என்மகள் இழந்த்து பண்பு,Izhandhu panbu - இழந்த்து தன் இயற்கையை. |