Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3285 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3285திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகன் பண்பிழந்தாளாகக் கூறுகின்றாள் பண்பாவது இயற்கையான தன்மை எம்பெருமானது ஒரோ குணங்களை நினைத்து விகாரப்படுகின்றாளென்றவாறு.) 4
பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4
பீடு உடை நான்முகனை,Peedu udai naan muganai - பெருமைபொருந்திய பிரமனை
படைத்தானுக்கு,Padaiththaanukku - (தனது திருநாபிக்கமலத்தில்) படைத்தவனும்
மாடு உடை வையம்,Maadu udai vaiyam - வஸுமதியான பூமயை
அளந்த மணாளற்கு,Alanda manaalarukku - (திரிவிக்கிரமனாகி) அளந்துகொண்ட மணவாளனும்
நாடு உடை மன்னர்க்கு,Naadu udai mannarukku - நாட்டுக்கு கடவரான பாண்டவர்களுக்காக
தூது செல் நம்பிக்கு,Thoothu sel nambikku - தூது சென்றவனுமான பெருமான் விஷயத்தி லீடுபட்டதனால்
என் பாடு உடை அல்குல்,En paadu udai algul - பரந்தநிதம் பத்தையுடையளான என்மகள்
இழந்த்து பண்பு,Izhandhu panbu - இழந்த்து தன் இயற்கையை.