Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3286 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3286திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகள் கற்பிழந்தாளாகக் கூறுகின்றாள். “கற்பு – கல்வி, அதாவது ஜ்ஞானம்“ என்பது ஈடு. தன்னறிவையிழந்தாளென்றபடி) 5
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு,Panbu udai vedham payantha paranukku - சீர்மைமிக்க வேதங்களை (ப்பிரமனுக்கு) உபகரித்தருளின பரம புருஷனும்,
மண்புரை இடந்தவராகற்கு,Manpurai idanthavararkku - மண்மிக்க பூமியை யிடந்தெடுத்த வராஹமூர்த்தியும்,
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு,Then punal palli em deva praanukku - தெளிந்த நீரையுடைய ஏகார்ணவத்திலே பள்ளிக்கொண்ட தேவபிரானுமான எம்பெருமான் விஷயத்தில் (ஈடுபட்டு)
என் கண்புனை கோதை இழந்தது,En kanpunai kodhai izhandhadhu - கண்ணைக்கவர்கின்ற கூந்தலையுடையளான என் மகள் இழந்தது.
கற்பு,Karpu - அறிவுடைமை.