Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3287 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3287திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “தோற்றது மெய்யே“ என்று, தன்மகள் சரீரத்தை இழந்தாளாகச் சொல்லுகிறாள்) 6
கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6
கற்பகம் கா அனநல் பல தோளற்கு,Karpagam kaa ananal pala tholarkku - கற்பகச்சோலைபோன்ற நல்ல பல திருத்தோள்களையுடையவனும்
சுடர் பொன் குன்று அன்ன பூ தண் முடியற்கு,Sudar pon kundru anna poo than mudiyarkku - சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிகவழகிய திருவபிஷேகத்தை யுடையவனும்
நல் பல தாமரை நான் மலர் கையற்கு,Nal pala thaamarai naan malar kaiyarkku - அப்போதலர்ந்த தாமரைப் பூப்போன்று விலக்ஷணமான பல திருக்கைகளையுடையவனுமான எம்பெருமான் திறத்திலீடுபட்டதனால்
என் வில் புருவம் கொடி,En vil puruvam kodi - வில்போன்ற புருவத்தை யுடையளான என் பெண்கொடி
தோற்றது,Thoatradhu - இழந்தது
மெய்,Mey - தன்னுடம்பையாம்.