| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3288 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “என்தையலிழந்த்து தன்னுடைச் சாயே“ என்கிறாள். சாயா என்னும் வடசொல் எனத் திரிந்த்து. சாயை யாவது ஒளி. லாவண்ய மிழந்தாளென்கை. உரு வேறுபாடுற்ற ளென்றவாறு.) 7 | மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன் தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7 | மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு,Mei amar pal kalannku aninthaanukku - திருமேனிக்குபொருத்தமன பல திருவாபரணங்களை நன்றாக அணிந்து கொண்டிருப்பவனும் பை அரவு இன் அணை பள்ளியினானுக்கு,Pai aravu in anai palliyinaanukku - படமெடுத்த ஆதிக்ஷேனாகி இனிய படுக்கையிலே துயிலமர்ந்தவனும் கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு,Kaiyodu kaal seyya kannapiraanukku - திருக்கைகளும் திருவடிகளும் சிவந்திருக்கப்பெற்றவனுமான கண்ணபிரான விஷயத்திலீடுபட்டதனால் என் தையல் இழந்த்து,En thaiyal izhandhu - என் மகள் இழந்தது தன்னுடை சாயே,Thannudai saaye - தனது ஒளியாம். |