| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3289 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில், என்னுடைய பெண்பிள்ளை தன்னுடைய மாட்சியை யிழந்தா ளென்கிறாள். எவ்வளவோ பெருமையாக வாழ்ந்தவள் அப்பெருமையெல்லாம் போய் இங்ஙனே தரைப்பட்டுக்கிடக்கின்ற பரிதாபம் என்னே! என்கிறாள்.) 8 | சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என் வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8 | ருந்தம் சாய ஒசித்த தமிபற்கு,Rundham saaya ositha thamiparku - குருந்தமரம் வேரோடுபறியுண்டு சாயும்படி அதனை முறித்த அத்விதீயனும் மாயம் சகடம் உதைத்த மணாளற்கு,Maayam sakatam udhaitha manaalarku - க்ருத்ரிம்மான (அஸுராவேசங்கொண்ட) சகடத்தைப் பொடிபடுத்தின மணவாளனும் பேயை பிணம் படபால் உண்பிரானுக்கு,Peayai pinam padapaal unpiraanukku - பூதனையென்கிற பேய்ச்சி பிணமாகும்படி அவளது முலைப்பாலை யுண்டவனுமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால் என் வாசம் குழலி,En vaasam kuzhali - வாசனைபொருந்திய கூந்தலையுடையளான என்மகள் இழந்தது மாண்பு,Izhandhadhu maanpu - இழந்தது தன் மாட்சிமை யாம். |