Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3290 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3290திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் என்மகள் அழகிழந்தாளென்கிறாள். தன்னழகாலே அவனைவசப்படுத்திக் கொள்ள பிறந்தவிவள் அவனழகிலே யீடுபட்டுத் தன்னழகை யிழந்தாளென்று வருந்துகிறாள்.) 9
மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9
மாண்பு அமை கோலத்து,Maanpu amai kolaathu - அழகமைந்த வடிவையுடையனான
எம் மாயம் குறளற்கு,Em maayam kuralarku - எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும்
சேண் சுடர் குன்று அன்ன,Senn sudar kunru anna - உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற
செம் சுடர் மூர்த்திக்கு,Sem sudar moorthikku - செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும்
காண் பெருதோற்றத்து,Kaan perudhoatrrathu - அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய
என் காகுத்தன் நம்பிக்கு,En kaakuthan nambikku - இராமபிரானுமான பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் பூண் புனைமென் முலை,En poon punaimen mulai - ஆபரணங்களையணிந்தமெல்லிய முலைகளை யுடையளான என்மகள்.
தோற்றது பொற்பு,Thoatrrathu porupu - இழந்தது அழகாம்