| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3291 | திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்ல் “என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே“ என்கிறாள் திருத்தாய். கட்டு என்பதற்கு ஸ்த்ரீத்வமர்யாதை என்றும் பொருள், “எல்லாம்“ என்றும் பொருள். ஸ்த்ரீ த்வமர்யாதையையிழக்கையாவது – லஜ்ஜையோடும் அடக்கத் தோடும் கூடியிருக்கவேண்டிய தன்மையை இழத்தலாம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொன்றை யிழந்தாளாகச் சொல்லிவந்தான். பலசொல்லியென்? இழவாதது ஒன்றுண்டோ? எல்லாமுமிழந்தாள் என்கிறாள்.) 10 | பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10 | பொற்பு அமை நீள் முடி,Porpu amai neel mudi - அழகமர்ந்து உயர்ந்த கிரீடத்திலே பூ தண் துழாயற்கு,Poo than thulaayarukku - அழகியகுளிர்ந்த திருத்துழாயையுடையவனும் மல் பொரு தோள் உடை,Mal poru thol udai - மல்லர்களோடு போர்செய்த திருத்தோள்களையுடையவனும் மாயம் பிரானுக்கு,Maayam pirankku - அற்புதச் செயல்களைச் செய்யும் மஹோபகாரகனும் நிற்பன பல் உரு ஆய் நிற்கும்,Nirpana pal uru aai nirukkum - ஸ்தாவர ஜங்கமங்களாய் நிற்கின்ற பலவகைப் பதார்த்தங்களுமாயுள்ளவனும் மாயற்கு,Maayarkku - (அப்படியிருக்கச் செய்தேயும் அவற்றின் குற்றங்கள் தன்மீது ஏறப்பெறாமலிருக்கும்) மாயனுமான பெருமான் திற திலீடுபட்டதனால் என் கற்புடையாட்டி,En karputaiyaatti - தக்க அறிவுடையளான என் மகள் இழந்தது கட்டு,Ilandhadhu kattu - இழந்தது எல்லாமுமாம். |