Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3293 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3293திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (படுக்கைத்தலையிலே மகளைக் காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது) 1
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1
உண்ணும் சோறு,Unnum sooru - உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர்,Parukum neer - குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்,Thinnum vettrilaiyum ellam - தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே,Kannan emperumaan endru endrae - (எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி
கண்கள் நீர்கள் மல்கி,Kangal neergal malgi - கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த
என் இள மான்,En ila maan - இளமான் போன்ற என்மகள்
மண்ணினுள்,Manninul - பூமண்டலத்துள்ளே
சீர் வளம் மிக்கவன்,Seer valam mikkavan - சீரும் சிறப்பும் மிகுந்தவனான
அவன்,Avan - அப்பெருமானுடைய
ஊர்,Oor - திவ்யதேசத்தை
வினவி,Vinavi - விசாரித்துக்கொண்டு சென்று
புகும் ஊர்,Pukum oor - சேர்ந்தவிடம்
திருக்கோளூரே,Thirukkoloore - திருக்கோளூராகவே யிருக்க வேணும்
திண்ணம்,Thinnam - இதில் ஸந்தேஹமில்லை