| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3293 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (படுக்கைத்தலையிலே மகளைக் காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது) 1 | உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித் திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1 | உண்ணும் சோறு,Unnum sooru - உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும் பருகும் நீர்,Parukum neer - குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம்,Thinnum vettrilaiyum ellam - தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும் கண்ணன் எம்பெருமான் என்று என்றே,Kannan emperumaan endru endrae - (எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி கண்கள் நீர்கள் மல்கி,Kangal neergal malgi - கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த என் இள மான்,En ila maan - இளமான் போன்ற என்மகள் மண்ணினுள்,Manninul - பூமண்டலத்துள்ளே சீர் வளம் மிக்கவன்,Seer valam mikkavan - சீரும் சிறப்பும் மிகுந்தவனான அவன்,Avan - அப்பெருமானுடைய ஊர்,Oor - திவ்யதேசத்தை வினவி,Vinavi - விசாரித்துக்கொண்டு சென்று புகும் ஊர்,Pukum oor - சேர்ந்தவிடம் திருக்கோளூரே,Thirukkoloore - திருக்கோளூராகவே யிருக்க வேணும் திண்ணம்,Thinnam - இதில் ஸந்தேஹமில்லை |