| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3294 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (பாராங்குச நாயகியின் லீலோபகரணங்களுள் ஒன்றான பூவையென்னும் பறவைகளை நோக்கித் திருத்தாயார் கேட்கிறார் என் பக்கலில் நசையற்று ஒழிந்தாளாகிலும் உங்களை நினைத்தாவது என்மகள் இங்கு மீண்டு வரக்கூடுமோ? சொல்லுங்கள் என்கிறாள். பூவைப்பறவை விடையளிக்க மாட்டாத அஃறிணையென்ற்றிந்தும் மதிகலங்கிக்கேட்கிறபடி. ஆழ்வாருடைய நித்யக்ரமத்தைச் சொல்லுவன முன்னடிகள்.) 2 | ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2 | பூவைகளே,Poovaikale - பூவைப் பறவைகளே! ஊரும் நாடும் உலகமும்,Uurum naadum ulagum - தானிருந்த ஊரும் நாடும் உலகமுமெல்லாம் தன்னைபோல்,Thannaipol - தன்னைப்போலவே அவனுடைய,Avanudaiya - எம்பெருமானுடைய பேரும் தார்களுமே பிதற்ற,Perum thaarkalume pithatra - திருநாமங்களையும் சின்னங்களையுமே பிதற்றும்படி (செய்யுமவளான) கொடியேன் கொடி,Kodiyaan kodi - பாவியேனுடைய மகள் வான் கற்பு இடறி,Vaan karppu idari - சிறந்த ஸ்த்ரீத்வமர்யாதையைக்கடந்து நல் வளம் சேர் பழனம்,Nal valam ser pazhanam - விலக்ஷணமான வனம் பொருந்திய நீர்நிலைகளையுடைத்தான் திருக்கோளூர்க்கே சேரும்,Thirukkoloorkae serum - திருக்கோளூரிலேயே சென்று சேர்ந்திருப்பன், போரும் கொல்,Porum kol - (உங்களைநினைத்தாகிலும்) திரும்பிவருவாளோ உரையீர்,Uraiyeer - சொல்லுங்கள். |