| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3295 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஐயோ! என்மகள் திருக்கோளூரிலே எப்பாடு படுகிறாளோ வென்கிறாள் தாய்.) 3 | பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3 | பூவை,Poovai - பூவைகளென்ன பை கிளிகள்,Pai kilikal - பசுமைதங்கிய கிளிகளென்ன பந்து,Pandhu - பந்துகளென்ன தூதை,Thoothai - சிறுசோறுசமைக்கும் பானைகளென்ன பூ புட்டில்கள்,Poo puttilkal - பூவிடும் குடலைகளென்ன ஆகிய (லீலோபகரணங்களான) யாவையும்,Yaavaiyum - இவையெல்லாவற்றாலும் உண்டாகக்கூடிய இன்பம் திருமால் திரு நாமங்களே,Thirumaal thiru naamangale - பகவானுடைய திருநாமங்களினாலேயாம்படி கூவி,Koovi - அத்திருநமங்களைச் சொல்லியழைத்து எழும்,Ezhum - உஜ்ஜீவிப்பவளான என் பாவை,En paavai - எனது பெண்பிள்ளை யானவள் இனி,Ini - இங்கே ஒரு குறையற்றிருக்கச் செய்தேயும். தண் பழனம் திரு கோளுர்க்கே போய்,Than pazhanam thiru kolurkkay poi - குளிர்ந்த நீர் நிலயங்களையுடைய திருக்கோளூர்க்கே புறப்பட்டுப்போய் கோவை வாய் துடிப்ப,Kovai vaay thudippa - கோவைப்பழம் போன்ற அதரம் துடிக்கும்படியாக மழை கண்ணொடு,Mazhai kannodu - நீர்பெருகப்பெற்ற கண்களோடே நின்று என் செய்யும் கொலோ,En seyyum kolo - என்னபாடுபடுவளோ! (அவ்விருப்பை நான் காணப்பெற்றிலேனே! என்று அலமருகின்றாளென்க) |