| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3296 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (என் மகளுடைய நடவடிக்கையைக் கண்டு உலகத்தார் உகப்பர்களோ! அன்றி, வெறுப்பர்களோ வென்று சங்கிக்கிறாள் தாய்.) 4 | கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ? சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே! செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4 | இள மான்,Ila maan - இளமான் போன்ற என்மகள் செல்வம் மல்கி அவன் கிடந்த திருகோளூர்க்கே,Selvam malgi avan kidantha thirukolurkkay - செல்வம் நிரம்ப்ப்பெற்று அப்பெருமான் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைக்குறித்தே மெல் இடை நுடங்க,Mel idai nudanga - மெல்லிய (தனது) இடை நோகும்படி செல்ல மேளினளே,Sella melinaLae - புறம்பட்டுச் செல்ல நெஞ்சு பொருந்திவிட்டாளே!, (இதைப்பற்றி) சில்லை வாய் பெண்டுகள்,Sillai vaai pendaL - வம்புவாயான நஞ்சேரிப் பெண்களுக்கு அயல் சேரி உள்ளாகும்,Ayal seri uLlaagum - அயல் சேரியிலுள்ள பெண்களும் கொல்லை என்பர் கொலோ,Kollai enbar kolo - இவள் வரம்பு கடந்து நடந்தவள்“ என்று சொல்லிப் பழிப்பர்களோ அல்லது) குணம் மிக்கனள் என்பர் கொலோ,Gunam mikkanal enbar kolo - விலக்ஷணகுண முடையவள்“ என்று சொல்லிக் கொண்டாடுவர்களோ! எல்லை,Yellai - என்னாகுமோ! |