Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3297 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3297திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூர்க்கு நடந்த என்மகள் அங்குச் சோலைகளையும் பொய்கைகளையும் அவன் கோயிலையுங்கொண்டு ஆச்சரியமான உகப்பை அடைவளே, அந்தோ! அவ்வுகப்பை நான் காணக் கொடுத்து வைக்கவில்லையே! என்று தளர்கின்றாள் தாய்.) 5
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5
ஏன் சிறு தேவி,Yen siru devi - வயதுமுதிராதவளும் திவ்யஸ்வபாவ முடையவளுமான என் மகள்
மேவி,Mevi - பகவந் குணங்களிலே யீடுபட்டு
நைந்து நைந்து,Naindhu naindhu - மிகவும் இளைத்து
விளையாடல் உறாள்,Vilayaadal ural - (தன் வயதுக்குரிய) விளையாட்டிலும பொருந்தாதவளாய்
போய்,Poi - இங்கு நின்றும் போய்
தன் திருமால் திருக்கோளூரில்,Than thirumaal thirukoluril - தனக்கு அஸாதாரணானான எம்பெருமானுடைய திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் ஸ்ரீ,Poo iyal pozhilum sri - பூக்களை இயல்பாகவுடைய சோலைகளையும்
தடமும்,Thadamum - தடாகங்களை
அவன் கோயிலும்,Avan koyilum - அவனது திவ்ய ஸந்நிதியையும்
கண்டு,Kandu - பார்த்து
ஆவி உள் குளிர,Aavi ul kulira - நெஞ்சு குளிரும்படியாக
இன்று எங்ஙனே உகக்கும் கொல்,Indru engane ukakkum kol - இன்று எவ்வண்ணம் களித்திருப்பளோ! (அந்நிலைமையை நான் காணப்பெற்றிலேனே!)