| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3298 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (கீழ்ப்பாட்டில் “எங்ஙனே யுகக்குங்கொல்!“ என்றாள், அவள் உகக்கும்படியைப் பாசுரமிட்டுச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6 | இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த் தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6 | எனக்கு,Enakku - தன்னைப்பிரிந்து நோவுபட்டுக் நடக்கிற எனக்கு இன்று,Indru - இப்போது உதவாது அகன்ற,Udhavathu akanra - உசாத்துணையாக இராதே கைகழித்துபோன இள மான்,Ila maan - இளமான்போன்ற என்மகள் போய்,Poi - வருந்தி வழிநடந்து போய் தென்திசை திலதம் அனையை,Thenthisai thilatham anaiyai - தெற்குத் திசைக்கு அலங்காரமான திருக்கோளூர்க்கே சென்று,Thirukolurkkay sendru - திருக்கோளூரிலே பிரவேசித்து இனி,Ini - அங்ஙனம் புகுந்த பின்பு தன்னை வசீகரிக்க அத்திருமாலினுடைய திருக்கண்ணும் செம்வாயும் கண்டு,Thirukkanum semvayum kandu - திருக்கண்களையும் செவ்விய அதரத்தையும் கண்டு நெடு கண்கள் பனிமல்க,Nedhu kangal panimalga - தனது விசாலமான கண்களில் ஆனந்த பாஷ்பம் நிரம்பப்பெற்று (ஹர்ஷப்ரகர்ஷத்தாலே) நின்று நின்று நையும்,Ninru ninru nayum - ஒன்றுஞ் செய்யமாட்டாதே சிதிலையாகி நிற்பள் |