Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3301 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3301திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூரெம்பெருமான் பக்கலிலே ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிமொழிகளுக்கும் அஞ்சாதே எங்களையும் ஒருபொருளாக மதியாதே நடந்து சென்றாளே யென்கிறாள் திருத்தாய்.) 9
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9
நேர் இழை,Ner izhai - நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள்,
காரியம் நல்லனகள் அவை காணில்,Kaariyam nallanakal avai kaanil - பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால்
என் கண்ணனுக்கு என்று,En kannanukku endru - “இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து
ஈரியாய் இருப்பாள்,Eeriyaai iruppaal - ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள்
இது எல்லாம் கிடக்க,Idhu ellam kidakka - இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும்
இனி,Ini - இப்போது
போய்,Poi - வெளியேறிச் சென்று
சேரி பல் பழி தூய் இரைப்ப,Seri pal pazi thooyiraippa - சேரியிலுள்ளார் பல பழமொழிகளைத் தூற்றி கோஷிக்கும்படியாக
திருக்கோளூர்க்கே நடந்தாள்,Thirukolurkkay nadandhaal - திருக்கோளூரை நோக்கியே நடந்து சென்றாள்,
எம்மை ஒன்றும் நினைத்திலன்,Emmai ondrum ninaithilan - எங்களை ஒரு பொருளாக மதித்திலன்