| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3301 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூரெம்பெருமான் பக்கலிலே ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிமொழிகளுக்கும் அஞ்சாதே எங்களையும் ஒருபொருளாக மதியாதே நடந்து சென்றாளே யென்கிறாள் திருத்தாய்.) 9 | காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச் சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9 | நேர் இழை,Ner izhai - நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள், காரியம் நல்லனகள் அவை காணில்,Kaariyam nallanakal avai kaanil - பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால் என் கண்ணனுக்கு என்று,En kannanukku endru - “இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து ஈரியாய் இருப்பாள்,Eeriyaai iruppaal - ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள் இது எல்லாம் கிடக்க,Idhu ellam kidakka - இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும் இனி,Ini - இப்போது போய்,Poi - வெளியேறிச் சென்று சேரி பல் பழி தூய் இரைப்ப,Seri pal pazi thooyiraippa - சேரியிலுள்ளார் பல பழமொழிகளைத் தூற்றி கோஷிக்கும்படியாக திருக்கோளூர்க்கே நடந்தாள்,Thirukolurkkay nadandhaal - திருக்கோளூரை நோக்கியே நடந்து சென்றாள், எம்மை ஒன்றும் நினைத்திலன்,Emmai ondrum ninaithilan - எங்களை ஒரு பொருளாக மதித்திலன் |