திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3302 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3302திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்.) 10
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய் அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10
பதவுரை Show / Hide
தெய்வங்கள்,Dheivangal - தெய்வங்களே!
நினைக்கிலேன்,Ninaikkilen - எனக்கு ஒன்றும் தோன்றவில்லை,
நெடு கண் இளமான்,Nedu kann ilamaan - பெருத்த கண்களையுடைய இளமான் போன்ற என் மகள்
இனி போய்,Ini poi - இப்போது சென்று
அனைத்து உலகும் உடைய,Anaiththu ulagam udaiya - ஸர்வலோக ஸ்வாமியான
அரவிந்த லோசனனை,Aravinda losananai - செந்தாமரைக் கண்ணனை
தினை தனையும் விடாள்,Thinai thanaiyum vidaal - சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு
அவன் சேர் திருக்கோளூர்க்கே,Avan ser thirukolurkkay - அவன் வர்த்திக்கும் திருக்கோளூரை நோக்கியே
செல்ல வைத்தனள்,Sella vaiththanal - சடக்கெனச் சென்றாள்,
மனைக்கு வான் பழியும் நினையான்,Manaikku vaan pazhiyum ninaiyaan - தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென் பதையும் நினைத்திலள்.