Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3304 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3304திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (எம்பெருமான் திறத்தில் புருஷகாரக்ருத்யம் பண்ணுமவர்களுக்கு உபயவிபூதியையும் பரிசளித்தாலும் போதாது என்கிற சாஸ்த்ரார்த்தம் இப்பாட்டில் வ்யக்தமாகிறது.) 1
பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1
நல் நலன் புள் இனங்காள்,Nal nalan pul inangkaal - சிறந்த நற்குணமுடைய பறவைத்திரள்களே!
விளையாட்டியேன் நான் இரந்தேன்,Vilayaattiyen naan irantheen - பிரிவாற்றாமைக்குரிய பாபத்தைப்பண்ணினநான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (எதற்காகவென்னில்)
முன் உலகங்கள் எல்லாம் படைத்த,Mun ulagangal ellam padaitha - முதலில் உலகங்களை யெல்லாம் உண்டாக்கின
முகில் வண்ணன்,Mugil vannan - காளமேக நிறத்தனாயும்
கண்ணன்,Kannan - அடியார்க்கு எளியனாயும்
என் நலம் கொண்ட,En nalam konda - எனது நன்மைகளை யெல்லாம் கவர்ந்து கொண்டவனாயுமிருக்கிற
பிரான் தனக்கு,Piraan thanakku - எம்பெருமானுக்கு
என் நிலைமை உரைத்து,En nilamai uraiththu - எனது அவஸ்தையைச் சொல்லி
பொன்உலகு ஆளீர்புவனி முழுது ஆளீர்,Pon ulagu aaleer bhuvani muzhuvadhum aaleer - உபய விபூதியையும் ஆளுங்கோள். (இதுவே எனது வேண்டுகோள்)