| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3305 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (என்னுடைய ஆற்றாமையை எம்பெருமானுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும். கொண்டாட அத்தை அங்கீகரிக்க வேணுமென்று சில கிளிகளை நோக்கி வேண்டுகின்றாள்.) 2 | மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ? கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2 | கிளிகாள்,Kilikal - கிளிகளே! கை அமர் சக்கரம்,Kai amar sakkaram - திருக்கையில் அமர்ந்த திருவாழியையுடையனும் கனி வாய்,Kani vaai - கொவ்வைக்கனிபோன்ற அதரத்தை யுடையனுமான என் பெருமானைகண்டு,En perumanaikandu - எம்பெருமானைச் சேவித்து மெய் அமர் காதல் சொல்லி,Mei amar kaadhal solli - உடம்போடே அணையவேண்டும்படி எனக்குண்டாயிருக்கிற என் காதலைத் தெரிவித்து விரைந்து ஓடி வந்து,Virainthu odi vandhu - உடனே இவ்விடம் வந்து சேர்ந்து மை அமர் வாள் நெடு கண்,Mai amar vaal nedu kann - மையணிந்து அழகிய நீண்ட கண்களையுடைய மங்கைமார் முன்பு,Mangaimaar munbu - தோழிமார் முன்னிலையிலே என் கை இருந்து,En kai irundhu - என் கையிலே வீற்றிருந்து நெய் அமர் இன் அடிசில்,Nei amar in adisil - நெய்யோடு பொருந்திய இனிய இடிசிலை பாலோடு,Paalodu - பாலோடுங்கூட நிச்சல் மேலீர்,Nichal meleer - நித்யமாக ஸ்லீகரிக்க வேணும். |