| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3306 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (இனமாய் இருக்கிற வண்டுகளைக் குறித்து எம்பெருமானுக்கு தன் தசையை அறிவித்து வந்து என் தலை மேலே வர்த்தியுங்கோள் என்கிறாள்.) 3 | ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ? கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3 | கூடிய வண்டு இனங்காள்,Koodiya vandu inangal - கூடிக் களித்திருக்கின்ற வண்டுத்திரள்களே! குருநாடு உடைய ஜவர்கட்கு ஆய்,Kurunadu udaiya javargadku aay - குருக்ஷேத்திரத் தலைவர்களான பஞ்சபாண்டவர்களுக்காக ஆடிய மா நெடு தேர்படை,Aadiya maa nedu terpaday - ஆடலில் சிறந்த குதிரைகளையும்பெரிய தேர்களையும் மற்றுமுள்ள சேனைகளையும் நீறு எழ சென்ற,Neeru ezha sendra - பொடியாம்படி முடித்த பிரான்,Piraan - எம்பெருமான் சூடிய,Soodiya - திருக்குழலில் அணிந்துகொண்டிருக்கிற தண் துளபம் உண்ட,Than thulabam unda - குளிர்ந்த திருத்துழாயிலேயிருந்து மதுபானம் பண்ணின தூ மது வாய்கள் கொண்டு,Thoo madhu vaaygal kondu - தெளிந்த மதுவையுடைத்தான வாயையுடையீர்களாய்க் கொண்டு ஓடி வந்து,Odi vandhu - விரைந்து வந்துசேர்ந்து என் குழல் மேல்,En kuzhal mel - என் கூந்தலிலுள்ள ஒளி மர் மலர்,Oli mar malar - ஒளி பொருந்திய சிறந்த பூவிலே ஊதீர்,Oodeer - உங்களுடைய உத்ஸாஹச் செயல்களைச் செய்யுங்கள். |