| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3308 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (மீண்டும் கிளிகளை விளித்துச் சொல்லுகிறாள். எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு “உம்முடைய தக்கவாறு இதுவோ“ வென்னுங் கோளென்கிறாள்.) 5 | நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்! வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5 | யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kiligal - நான் வளர்க்க வளர்ந்த கிளிகளே! வம்மின்,Vammin - இப்படி வாருங்கள் நுங்கட்கு யான் உரைக்கேன்,Nungadku yaan uraikkean - உங்களுக்கு நான் ஒன்றுசொல்லுகிறேன். வெம் கண் புள்,Vem kann pul - வெவ்விய கண்ணையுடைய பெரிய திருவடியை ஊர்ந்து வந்து,Oorndhu vandhu - நடத்திக்கொண்டு என் பக்கலிலே வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த,Vinaiyenai nenjam kavarntha - பரவியான என்னுடைய உள்ளத்தைக கொள்ளைகொண்ட செம் கண்,Sem kann - புண்டரீகாஷனும் கரு முகிலை,Karu mugilai - காளமேகச்யாமனும் செய்யவாய்,Seyya vaai - சிவந்த அதரத்தை வுடையவனும் செழு கற்பகத்தை,Sezhu karpagaththai - விலக்ஷண கல்பவ்க்ஷம்போன்ற வனுமான எம்பிரானை எங்கு ஆகிலும் சென்று கண்டு,Engu aagilum sendru kandu - எவ்விடத்திலாவது சென்று சேவித்து இதுவோ தக்க ஆறு என்மின்,Idhuvo thakka aaru enmin - இதுதானோதகுதியென்று சொல்லுங்கோள். |