| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3310 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -பரம சேதனன் பொகட்டுப் போனான் -சைதன்யம் லேசம் உடைய பக்ஷிகள் பறந்து போயினவும் அந்நிய பரமாயினவும் ஆயிற்றன -இதுக்கு ஹேது சேதனங்களையோ -என்று பார்த்து -அசேதனமான பாவையை இரக்கிறாள்) 7 | பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான் மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப் பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7 | பாவைகள்,Paavaigal - எனது லீலோபகரணங்களான மாப்பாச்சிகளே! பூவைகள் போல நிறத்தன்,Poovaigal pola nirathan - பூவைப்பூவண்ணனும் புண்டரீகங்கள் போலும் கண்ணன்,Pundareekangal polum kannan - புண்டரீகாக்ஷனும் யாவையும் யாவரம ஆய்நின்ற,Yaavaiyum yaavarama aay nindra - ஸகல சேதநாசேதந ஸ்வரூபியும் மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தியுக்தனும் என் ஆழி பிரான்,En aazhi piraan - கையுந்திருவாழியுமான அழகை எனக்குக் காட்டித்தந்தவனும் மாவை வல் வாய் பிளந்த,Maavai val vaai pilantha - குதிரை வடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மகரனுடைய வலியவாயைக்கீண்டு அவனை முடித்தவனுமான மதுசூதற்கு,Madhusoodharku - மதுஸூதநனுக்கு வினையாட்டியேன் பாசறவு,Vinaiyaattiyen paasaaravu - பாலியான என்னுடைய நிறக்கேட்டை தீர்க்கிற்றிரே,Theerkitrire - தீர்க்க வல்லிகோளோ? (தீர்க்க வேணும் என்றபடி) |