| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3311 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –முன்னே நின்ற குருகை குறித்து -அயர்வறும் அமரர்களைப் போலே உம்மால் அல்லது செல்லாதாள் ஒருத்தி உம்மைப் பெறாதே நோவு படா நின்றாள் என்று சொல் என்று அருளிச் செய்கிறாள்) 8 | பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்? ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள் மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8 | ஆக அறு தூவி,Aaga aru thoovi - பழிப்பற்ற சிறகையுடைய வெள்ளை குருகே,Vellai kuruge - பரிசுத்தமான குருகே! வினையேன்,Vinaiyen - பாலியான நான் பாசறவு எய்தி,Paasaravu eidhi - நிறமழிந்து இன்னே,Inne - இவ்வண்ணமாகவே எனை ஊழி,Enai oozi - எத்தனைகாலம் நைந்துகிடப்பேன்! ஒரு நாள் அருள் செய்து,Oru naal arul seydhu - ஒருநாள் க்ருபை பண்ணி, மாசு அறு நீலம் சுடர் முடி,Maasu aru neelam sudar mudi - மாசற்ற நீலச்சுடர் பொருந்திய மயிர் முடியையுடையனான வானவர் கோனை கண்டு,Vaanavar konai kandu - தேவாதிதேவனைக் கண்டு ஏக அறும் தும்மை அல்லால்,Eka arum thummai allaal - “பழிப்பற்ற உம்மை யொழிய பேர்த்து மற்று மறுநோக்கு இவள்,Perththu matru marunookku ival - பின்னை வேறொரு கதியுடையளல்லன்“ (என்று சொல்லு.) |