Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3311 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3311திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –முன்னே நின்ற குருகை குறித்து -அயர்வறும் அமரர்களைப் போலே உம்மால் அல்லது செல்லாதாள் ஒருத்தி உம்மைப் பெறாதே நோவு படா நின்றாள் என்று சொல் என்று அருளிச் செய்கிறாள்) 8
பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8
ஆக அறு தூவி,Aaga aru thoovi - பழிப்பற்ற சிறகையுடைய
வெள்ளை குருகே,Vellai kuruge - பரிசுத்தமான குருகே!
வினையேன்,Vinaiyen - பாலியான நான்
பாசறவு எய்தி,Paasaravu eidhi - நிறமழிந்து
இன்னே,Inne - இவ்வண்ணமாகவே
எனை ஊழி,Enai oozi - எத்தனைகாலம் நைந்துகிடப்பேன்!
ஒரு நாள் அருள் செய்து,Oru naal arul seydhu - ஒருநாள் க்ருபை பண்ணி,
மாசு அறு நீலம் சுடர் முடி,Maasu aru neelam sudar mudi - மாசற்ற நீலச்சுடர் பொருந்திய மயிர் முடியையுடையனான
வானவர் கோனை கண்டு,Vaanavar konai kandu - தேவாதிதேவனைக் கண்டு
ஏக அறும் தும்மை அல்லால்,Eka arum thummai allaal - “பழிப்பற்ற உம்மை யொழிய
பேர்த்து மற்று மறுநோக்கு இவள்,Perththu matru marunookku ival - பின்னை வேறொரு கதியுடையளல்லன்“ (என்று சொல்லு.)