Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3312 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3312திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (புதா வென்பது நாரையிலேயே அவந்தரஜாதிபேதம், பெருநாரை யென்பர். அப்பறவைகளைப் பிரார்த்திக்கிறாள்.) 9
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9
நீர் திரை மேல் உலவி,Neer thirai mel ulavi - நீரலைகளின் மேலே உலாவி
இரை தேரும்,Irai therum - உணவுப்பொருள்களை ஆராய்கின்ற
புதா இனங்காள்,Pudhaa inangal - பெருநாரைக்கூட்டங்களே!
வினையாட்டியேன் நான்,Vinaiyaattiyen naan - பாவியான நான்
பேர்த்து மற்று ஓர்களை கண் ஒன்று இலேன்,Perththu matru orugalai kann onru ilean - (உங்களையொழிய) வேறொரு தஞ்சமுடையனல்லேன் (எனக்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்)
கார் திரள் மா முகில் போல்,Kaar thiral maa mugil pol - கார்காலத்தில் திரண்ட மஹா மேகங்கள் போன்றவனான
கண்ணன் விண்ணவர் கோனை கண்டு,Kannan vinnavar konai kandu - கண்ணபிரானான தேவாதி தேவனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு,Vaarththaigal kondu - அவன் கூறும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு
அருளிவந்து இருந்து,Arulivandhu irundhu - என் பக்கலில் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு
அருளி வந்து இருந்து,Aruli vandhu irundhu - என் பக்கலில் க்ருபைபண்ணி வந்திருந்து
வைகல் உரையீர்,Vaikal uraiyeer - (இதுவே போதுபோக்காம்படி) நெடும்போது சொல்லிக் கொண்டிருங்கள்