| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3312 | திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (புதா வென்பது நாரையிலேயே அவந்தரஜாதிபேதம், பெருநாரை யென்பர். அப்பறவைகளைப் பிரார்த்திக்கிறாள்.) 9 | பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்! கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9 | நீர் திரை மேல் உலவி,Neer thirai mel ulavi - நீரலைகளின் மேலே உலாவி இரை தேரும்,Irai therum - உணவுப்பொருள்களை ஆராய்கின்ற புதா இனங்காள்,Pudhaa inangal - பெருநாரைக்கூட்டங்களே! வினையாட்டியேன் நான்,Vinaiyaattiyen naan - பாவியான நான் பேர்த்து மற்று ஓர்களை கண் ஒன்று இலேன்,Perththu matru orugalai kann onru ilean - (உங்களையொழிய) வேறொரு தஞ்சமுடையனல்லேன் (எனக்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்) கார் திரள் மா முகில் போல்,Kaar thiral maa mugil pol - கார்காலத்தில் திரண்ட மஹா மேகங்கள் போன்றவனான கண்ணன் விண்ணவர் கோனை கண்டு,Kannan vinnavar konai kandu - கண்ணபிரானான தேவாதி தேவனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு,Vaarththaigal kondu - அவன் கூறும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு அருளிவந்து இருந்து,Arulivandhu irundhu - என் பக்கலில் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு அருளி வந்து இருந்து,Aruli vandhu irundhu - என் பக்கலில் க்ருபைபண்ணி வந்திருந்து வைகல் உரையீர்,Vaikal uraiyeer - (இதுவே போதுபோக்காம்படி) நெடும்போது சொல்லிக் கொண்டிருங்கள் |