Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3314 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3314திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ரீ ஒன்பதினாயிரப்படி –6-8-11- நிகமத்தில் -இப்பத்தில் ஆழ்வாருடைய ஆர்த்தியை அனுசந்தித்தார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய் என்கிறார்) 11
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11
நாற்றம் கொள் பூ பொழில்சூழ் குரு கூர் சடகோபன்,Maatram kol poo pozhi soozh kuru koor Sadagopan - பரிமளப்ரசுரமான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு,Maatramgal aynthu kondu - சொற்களை ஆராய்ந்தெடுத்து
மது சூதபிரான் அடி மேல்,Madhu soodhapiraan adi mel - எம்பெருமான் திருவடி விஷயமாக
சொன்ன,Sonna - அருளிச்செய்த
தோற்றங்கள் ஆயிரத்துள்,Thotramgal aayirathul - ஆவிர்ப்பாவரூபமான இந்த ஆயிரத்தினுள்
ஊற்றின கண் நுண் மணல்போல்,Ootrin kan nun manal pol - ஊற்றினிடத்தேயுள்ள நுண்ணிய மணல்போல்
நீர் ஆய் உருகா நிற்பர்,Neer aay urugaa nirpar - நீர்ப்பண்டமாக உருகப்பெறுவர்கள்