| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3315 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும் என்கிறார்.) 1 | நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய் கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால் வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1 | நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் கெடு வான் ஆய்,Neer aay nilan aay thee aay kaal aay kedu vaan aay - பஞ்ச பூதஸ்வரூபியும் சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்,Seer aar sudhargal irandu aay - சந்திரஸூர்யர்களாகிற சிறந்த தேஜ பதார்த்தஸ்வரூபியும் சிவன் ஆய்,Sivan aay - சிவனுக்கு அந்தர்யாமியும் அயன் ஆனாய்,Ayan aanaay - பிரமனுக்கு அந்தர்யாமியுமாயிருக்கும் எம்பெருமான்! கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி,Koor aar aazhi ven sangae aendhi - கூர்மைபொருந்திய திருவாழியையும் வெள்ளிய திருச்சங்கையும் திருக்கையில் தரித்துக்கொண்டு மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் களிக்கும்படி ஒருநாள்,Oru naal - ஒருநாளாகிலும் வாராய்,Vaarai - வந்தருளவேணும். |