| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3316 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் மஹா பலிக்கு உன் அழகைக் காட்டி அகில லோகத்தையும் அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஆச்சர்ய சக்தியை யுடைய நீ -நான் கண்டு உகக்கும்படி இந்த இடத்திலே வர வேணும் என்கிறார்.) 2 | மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2 | மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் (அழகு கண்டு) உகக்கும்படி குறள் ஆய்,Kural aay - வாமனமூர்த்தியாய் (மாவலியிடம் சென்று) வலம் பாட்டி,Valam paatti - தன்னுடைய சக்தியக்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட,Mannum vinnum konda - மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட மாயம் அம்மானே,Maayam ammaane - அற்புதனான ஸ்வாமியே! உனை நான் நண்ணி,Unai naan nanni - உன்னை நான் கிட்டி கண்டு உகந்து கூத்துஆட,Kandu ugandhu koothu aada - கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பரவசனாய் நர்த்தனம் பண்ணும்படியாக நண்ணி,Nanni - இங்கே வந்து கிட்டி ஒரு நாள்,Oru naal - ஒருநாளாகிலும் ஞாலத்தூடே நடவாய்,Nyaalaththooda nadavay - இந்நிலத்திலே நடையழகு காட்டியருளாய். |