Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3319 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3319திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற ஐந்து ப்ரகாரங்களைக் கொண்டு அடியார்களை உகப்பித்தருளாநின்ற நீ எனது நெஞ்சிலும் எழுந்தருளியிருந்து வைத்து என் கண்ணுக்குத் தோற்றாதேயிருந்தால் தளரமாட்டேனோ வென்கிறார்) 5
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5
விண் மீது இருப்பாய்,Vinn meedhu iruppaay - பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
மலை மேல் நிற்பாய்,Malai meel nirppaa - (அர்ச்சாரூபியாய்) திருமலையிலே நிற்குமவனே!
கடல் சேர்ப்பாய்,Kadal seerppaa - திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மண் மீது உழல்வாய்,Mann meedhu uzhalvaay - (ராமக்ருஷ்ணாதி விபவரூபத்தாலே அவதரித்து) பூமியின்மேல் ஸஞ்சரிப்பவனே!
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,Ivattrul engum maraindhu uraivaay - இந்த ஜகத்தில் ஸகலபதார்த்தங்களிலும் அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திப்பவனே!
எண் மீது இயன்ற புறம் அண்டத்தாய்,Enn meedhu iyandra puram andaththaa - எண்ணிக்கைக்கு மேலே போகக் கடவதான (எண்ணிறந்த) பஹிரண்டங்களிலு முளனானவனே! (நீ)
எனது ஆவியுள்,Enadhu aaviyul - என்னுடைய நெஞ்சுக்குள்ளே
மீதாடி,Meedhaadi - மிகவும் நடையாடி விட்டு
உரு காட்டாதே,Uru kaattaadhe - வடிவைக் கண்ணுக்காட்டாமல்
ஒளிப்பாயோ,Oli paayo - ஒளிக்கின்றாயே! இது தகுதியோ?