Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3320 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3320திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –காண்கைக்கு இவர் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்து அருளினானாகக் கொண்டு -யோக்யதை அயோக்யதை பாராதே லோகத்தை எல்லாம் அளந்து கொண்ட உன்னால் இழக்கப் படுவார் உண்டோ என்கிறார்.) 6
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6
ஓர் அடி,Oru adi - ஒரு திருவடியை
பாய் வைத்து,Paay vaiththu - பரப்பிவைத்து
பாவை நிலம் எல்லாம்,Paavai nilam ellam - கடல் சூழ்ந்த ஸகல பூமியும்
அதன் கீழ்,Adhan keezh - அந்தத் திருவடியின்கீழே யாம்படி
தாய்,Thaai - தாவியளந்து,
ஓர் அடியால,Oru adiyaal - மற்றொரு திருவடியாலே
உலகு எல்லாம,Ulagu ellam - மேலுலக மெல்லாவற்றையும்
தடவந்த,Thadavanda - ஆக்ரமித்த
மாயோன்,Maayon - ஆச்சரியசேஷ்டிதவே!
உன்னை காண்பான்,Unnai kaanbaan - உன்னைக் காணவேண்டி
வருந்தி,Varundhi - பிரயாஸ்ப்பட்டு
தீயோடு உடன் சேர் மெழுகு ஆய்,Theeyodu udan seer mezhuvu aay - நெருப்போடு சேர்ந்த மெழுகின் தன்மையை யுடையேனாய்
உலகில,Ulakil - இவ்வுலகத்தில்
எனை நாளும் திரிவேனோ,Enai naalum thirivaayno - எத்தனைநாளும் தட்டித்திரிவதேயோ என்கதி?