| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3320 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –காண்கைக்கு இவர் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்து அருளினானாகக் கொண்டு -யோக்யதை அயோக்யதை பாராதே லோகத்தை எல்லாம் அளந்து கொண்ட உன்னால் இழக்கப் படுவார் உண்டோ என்கிறார்.) 6 | பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம் தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6 | ஓர் அடி,Oru adi - ஒரு திருவடியை பாய் வைத்து,Paay vaiththu - பரப்பிவைத்து பாவை நிலம் எல்லாம்,Paavai nilam ellam - கடல் சூழ்ந்த ஸகல பூமியும் அதன் கீழ்,Adhan keezh - அந்தத் திருவடியின்கீழே யாம்படி தாய்,Thaai - தாவியளந்து, ஓர் அடியால,Oru adiyaal - மற்றொரு திருவடியாலே உலகு எல்லாம,Ulagu ellam - மேலுலக மெல்லாவற்றையும் தடவந்த,Thadavanda - ஆக்ரமித்த மாயோன்,Maayon - ஆச்சரியசேஷ்டிதவே! உன்னை காண்பான்,Unnai kaanbaan - உன்னைக் காணவேண்டி வருந்தி,Varundhi - பிரயாஸ்ப்பட்டு தீயோடு உடன் சேர் மெழுகு ஆய்,Theeyodu udan seer mezhuvu aay - நெருப்போடு சேர்ந்த மெழுகின் தன்மையை யுடையேனாய் உலகில,Ulakil - இவ்வுலகத்தில் எனை நாளும் திரிவேனோ,Enai naalum thirivaayno - எத்தனைநாளும் தட்டித்திரிவதேயோ என்கதி? |