| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3321 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பிரானே! எல்லாம் உன்னுடைய ஸங்கல்பாயத்தமாயிருக்க, எனக்கு அருள் செய்வதுதானோ மிகை என்கிறார்.) 7 | உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ! அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7 | உலகில் திரியும் கருமம் கதி ஆய்,Ulagil thiriyum karumam kathi aay - லோகத்தில் வியாபரிக்கிற ஸாதன கர்மஸ்வரூபியாயும் உலகம் ஆய்,Ulagam aay - அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்,Ulakukke oru uyirum aanaay - ஸர்வலோகங்களுக்கும் எகாத்மாவாயும் நிற்பவனே! புறம் அண்டத்து,Puram andaththu - அண்டங்களுக்கு வெளிப்பட்டிருப்பவர்களாய் அலகு இல் பொலிந்த,Alaku il polinda - எண்ணிக்கையில்லாதபடி விளங்குபவர்களாய் திசை பத்து ஆய,Disai paththu aay - பத்துத்திசைகளிலும் ஞானத்தாலே வ்யாப்தாயிருக்கின்ற முக்தாத்மாக்களை வடிவாகவுடையவனே! அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு,Alaku il polinda arivilenukku - எண்ணிக்கையில்லாதபடி விளங்குகின்ற அஜ்ஞானத்தையுடையேனான என் விஷயத்தில் அருளாய்,Arulai - க்ருபைபண்ணவேணும். |