| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3322 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -தேஜோ மாயா விக்ரஹத்தையுடைய நீ அவ்வடிவை எனக்கு அனுபவிப்பியாதே சாம்சாரிக விஷயங்களில் தள்ளி இன்னம் கெடுக்கத் தேடுகிறாயோ என்கிறார்.) 8 | அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்! வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே! கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ? பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8 | அறிவார் உயிர் ஆனாய்,Arivaar uyir aanaay - ஞானிகளை ஆத்மாவாக வுடையவனே! வெறி கொள் சோதி மூர்த்தி,Veri kol sodi moorthi - ஸுகந்தமயமாய் தேஜோமயமாயிருந்துள்ள திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே! அடியேன் நெடுமாலே,Adiyaen nedumaale - அடியேனிடத்தில் அளவுகடந்த வியாமோஹமுடையவனே! அறிவு இலேனுக்கு அருளாய்,Arivu ilenukku arulai - அறிவிலியான என் விஷயத்திலே அருள் செய்ய வேணும். பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்க,Piridhu onru ariya adiyaen aavi thigaiyka - வேறொரு புகலறியாத அடியேனுடைய நெஞ்சு கலங்கும்படியாக கிறி செய்து,Kiri seydhu - ஏதோ சூதுபண்ணி என்னை புறத்து இட்டு,Ennai purathu ittu - என்னைப் புறம்புண்டான பற்றுக்களிலே அகப்படுத்தி இன்னம் கெடுப்பாயோ,Innam kettuppaayoo - இன்னமும் கெடுக்க நினைக்கிறாயோ? |