Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3322 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3322திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -தேஜோ மாயா விக்ரஹத்தையுடைய நீ அவ்வடிவை எனக்கு அனுபவிப்பியாதே சாம்சாரிக விஷயங்களில் தள்ளி இன்னம் கெடுக்கத் தேடுகிறாயோ என்கிறார்.) 8
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8
அறிவார் உயிர் ஆனாய்,Arivaar uyir aanaay - ஞானிகளை ஆத்மாவாக வுடையவனே!
வெறி கொள் சோதி மூர்த்தி,Veri kol sodi moorthi - ஸுகந்தமயமாய் தேஜோமயமாயிருந்துள்ள திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே!
அடியேன் நெடுமாலே,Adiyaen nedumaale - அடியேனிடத்தில் அளவுகடந்த வியாமோஹமுடையவனே!
அறிவு இலேனுக்கு அருளாய்,Arivu ilenukku arulai - அறிவிலியான என் விஷயத்திலே அருள் செய்ய வேணும்.
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்க,Piridhu onru ariya adiyaen aavi thigaiyka - வேறொரு புகலறியாத அடியேனுடைய நெஞ்சு கலங்கும்படியாக
கிறி செய்து,Kiri seydhu - ஏதோ சூதுபண்ணி
என்னை புறத்து இட்டு,Ennai purathu ittu - என்னைப் புறம்புண்டான பற்றுக்களிலே அகப்படுத்தி
இன்னம் கெடுப்பாயோ,Innam kettuppaayoo - இன்னமும் கெடுக்க நினைக்கிறாயோ?