| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3323 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உனக்கு விதேயமான விஷய இந்திரியங்கள் நடையாடுகிற தேசத்திலே வைத்து என்னை முடிக்கத் தேடுகிறாயோ உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ளும் காலம் அணித்தது ஆகாதோ என்கிறார்.) 9 | ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ? தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9 | ஆவி திகைக்க,Aavi thigaiyka - நெஞ்சு கலங்கும்படியாந ஐவர் குமைக்கும்,Aivar kumaikkum - பஞ்சேந்திரியங்களும் பீடிக்கும் படியான சிற்றின்பம்பல,Sitrinbampala - அற்பாஸரங்களான விஷயங்கள் பலவற்றை பாவியேனை நீ காட்டி,Paaviyeanai nee kaatti - பாவியேன் கண்ணிலே நீ காண்பித்து படுப்பாயோ,Paduppaayoo - முடிக்க நினைக்கிறாயோ? வையம் தாவி,Vaiyam thaavi - பூமி முழுவதையும் அளந்து கொண்ட ஸ்வாதீனமாக்கிக் கொண்ட தட தாமரை கட்கே,Thada thamarai kattke - பெரிய திருவடித் தாமரைகளிலே நான் அந்வயிக்கும்படி கூவிக்கொள்ளும் காலம்,Koovikkollum kaalam - என்னை யழைத்துக் கொள்ளுங்காலம் இன்னம் குறுகாதோ,Innam kurukaadho - இன்னமும் ஸமீபித்ததாக ஆகக்கூடாதோ? |