Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3324 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3324திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அத்தை உன் திருவடிகளில் கைங்கர்யம் அல்லாமையாலே வேண்டா என்றேன் அத்தனை -அப்படியே கைவல்யமும் வேண்டேன் -என்கிறார்.) 10
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10
மாயோன்,Maayon - ஆச்சரியமானவனே!
குறுகா நீளா,Kurugaa neelaa - ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும்
இறுதி கூடா,Irudi kooda - முடிவுமில்லாமலும்
எனை ஊழி,Enai oozhi - எக்காலத்திலும்
சிறுகா பெருகா,Sirukaa perugaa - க்ஷய வ்ருத்திகளில்லாமலும்
அளவு இல்,Alavu il - பரிச்சேதமற்றதாயு மிருக்கிற
இன்பம்,Inbam - கைவல்யா நுபவஸுகமானது
சேர்ந்தாலும்,Serndhaalum - வந்து கூடினாலும்
தெரியில்,Theriyil - நிரூபித்துப்பார்க்கில்
மறுகால் இன்றி,Marukaal inri - பின்னையொருகாலும் இல்லாதபடியாக (மிகவும் அற்பகாலமாக)
உனக்கே ஆன் ஆகும் சிறு காலத்தை,Unakke aan aakum siru kaalatthai - உனக்கே அடிமைப்படும்படியான ஸ்வல்பகாலத்தை
உறுமோ,Urumoo - ஒத்திருக்குமோ?
அந்தோ,Andhoo - ஐயோ?