திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3324 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3324திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அத்தை உன் திருவடிகளில் கைங்கர்யம் அல்லாமையாலே வேண்டா என்றேன் அத்தனை -அப்படியே கைவல்யமும் வேண்டேன் -என்கிறார்.) 10
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10
பதவுரை Show / Hide
மாயோன்,Maayon - ஆச்சரியமானவனே!
குறுகா நீளா,Kurugaa neelaa - ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும்
இறுதி கூடா,Irudi kooda - முடிவுமில்லாமலும்
எனை ஊழி,Enai oozhi - எக்காலத்திலும்
சிறுகா பெருகா,Sirukaa perugaa - க்ஷய வ்ருத்திகளில்லாமலும்
அளவு இல்,Alavu il - பரிச்சேதமற்றதாயு மிருக்கிற
இன்பம்,Inbam - கைவல்யா நுபவஸுகமானது
சேர்ந்தாலும்,Serndhaalum - வந்து கூடினாலும்
தெரியில்,Theriyil - நிரூபித்துப்பார்க்கில்
மறுகால் இன்றி,Marukaal inri - பின்னையொருகாலும் இல்லாதபடியாக (மிகவும் அற்பகாலமாக)
உனக்கே ஆன் ஆகும் சிறு காலத்தை,Unakke aan aakum siru kaalatthai - உனக்கே அடிமைப்படும்படியான ஸ்வல்பகாலத்தை
உறுமோ,Urumoo - ஒத்திருக்குமோ?
அந்தோ,Andhoo - ஐயோ?