| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3324 | திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அத்தை உன் திருவடிகளில் கைங்கர்யம் அல்லாமையாலே வேண்டா என்றேன் அத்தனை -அப்படியே கைவல்யமும் வேண்டேன் -என்கிறார்.) 10 | குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10 | மாயோன்,Maayon - ஆச்சரியமானவனே! குறுகா நீளா,Kurugaa neelaa - ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும் இறுதி கூடா,Irudi kooda - முடிவுமில்லாமலும் எனை ஊழி,Enai oozhi - எக்காலத்திலும் சிறுகா பெருகா,Sirukaa perugaa - க்ஷய வ்ருத்திகளில்லாமலும் அளவு இல்,Alavu il - பரிச்சேதமற்றதாயு மிருக்கிற இன்பம்,Inbam - கைவல்யா நுபவஸுகமானது சேர்ந்தாலும்,Serndhaalum - வந்து கூடினாலும் தெரியில்,Theriyil - நிரூபித்துப்பார்க்கில் மறுகால் இன்றி,Marukaal inri - பின்னையொருகாலும் இல்லாதபடியாக (மிகவும் அற்பகாலமாக) உனக்கே ஆன் ஆகும் சிறு காலத்தை,Unakke aan aakum siru kaalatthai - உனக்கே அடிமைப்படும்படியான ஸ்வல்பகாலத்தை உறுமோ,Urumoo - ஒத்திருக்குமோ? அந்தோ,Andhoo - ஐயோ? |