திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3326 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3326திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((உலகமுண்டபெருவாயா) ஸகல ஜகத்தையும் ரக்ஷிக்குமியல்வை யுடைபையாய்க் கொண்டு திருமலையிலே நித்யஸந்நதி பண்ணியிருக்கிறவுன்னை நான் கிட்டியநுபவிக்கும் விரகு அருளிச் செய்ய வேணுமென்கிறார்.) 1
உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே! நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே! குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1
பதவுரை Show / Hide
ulagam unda peru vaaya,உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே!
ulappu il keerthi ammaane,உலப்பு இல் கீர்த்தி அம்மானே - முடிவில்லாத புகழுடைய பெருமானே
nilavum sudar soozi oli moorthi,நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி - அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
nediaay,நெடியாய் - மிகப்பெரியோனே!
adiyen aar uyire,அடியேன் ஆர் உயிரே - அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே!
ulagukku thilatham aay nindra,உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற
emperumane,எம்பெருமானே - அஸ்மத்ஸ்வாமியே!
kulam tol adiyen,குலம் தொல் அடியேன் - குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன்
una paadham,உன பாதம் - உனது திருவடிகளை
koodum aaru,கூடும் ஆறு - வந்து சேறும்படியை
kooraay,கூறாய் - அருளிச் செய்யவேணும்.