Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3326 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3326திருவாய்மொழி || 6-10–உலகம் 1
உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1
ulagam unda peru vaaya,உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே!
ulappu il keerthi ammaane,உலப்பு இல் கீர்த்தி அம்மானே - முடிவில்லாத புகழுடைய பெருமானே
nilavum sudar soozi oli moorthi,நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி - அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
nediaay,நெடியாய் - மிகப்பெரியோனே!
adiyen aar uyire,அடியேன் ஆர் உயிரே - அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே!
ulagukku thilatham aay nindra,உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற
emperumane,எம்பெருமானே - அஸ்மத்ஸ்வாமியே!
kulam tol adiyen,குலம் தொல் அடியேன் - குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன்
una paadham,உன பாதம் - உனது திருவடிகளை
koodum aaru,கூடும் ஆறு - வந்து சேறும்படியை
kooraay,கூறாய் - அருளிச் செய்யவேணும்.