திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3327 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3327திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((கூறாய் நீறாய்) விரோதிகளையெல்லாம் கிழங்கெடுக்கவல்ல திவ்யாயுதத்தினால் ஒளி பெற்றிருக்கிற நீ எனது விரோதிகளையும் போக்கி, நான் உன் திருவடிகளைச் சேரும் படி க்ருபை பண்ண வேணுமென்கிறார்.) 2
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே! சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே! ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-
பதவுரை Show / Hide
kodu valla asurar kulam ellaam,கொடு வல்ல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம்
kooru aay,கூறு ஆய் - பலபல கண்டங்களாகி
neeru aay,நீறு ஆய் - சாம்பலாகி
nilan aagi,நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும்
seeraa,சீறா - பின்னையும் சீறி
eriyum,எறியும் - ஜ்வலியா நிற்கிற
thiru nemi valavaa,திரு நேமி வலவா - திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே!
theyvam komaane,தெய்வம் கோமானே - நித்ய ஸூரிநாதனே!
seeru aar sunai,சேறு ஆர் சுனை - சேறு நிரம்பிய கனைகளிலே
thaamarai,தாமரை - செந்தாமரை மலர்கள்
sem thee malarum,செம் தீ மலரும் - சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - அளவுபடாத அன்பையுடையேனான நான்
un adi ser vannam,உன் அடி சேர் வண்ணம் - உன் திருவடிகளைச் சேறும்படி
arulaay,அருளாய் - அருள்புரிய வேணும்.