| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3327 | திருவாய்மொழி || 6-10–உலகம் 2 | கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே! சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே! ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2- | kodu valla asurar kulam ellaam,கொடு வல்ல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் kooru aay,கூறு ஆய் - பலபல கண்டங்களாகி neeru aay,நீறு ஆய் - சாம்பலாகி nilan aagi,நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும் seeraa,சீறா - பின்னையும் சீறி eriyum,எறியும் - ஜ்வலியா நிற்கிற thiru nemi valavaa,திரு நேமி வலவா - திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே! theyvam komaane,தெய்வம் கோமானே - நித்ய ஸூரிநாதனே! seeru aar sunai,சேறு ஆர் சுனை - சேறு நிரம்பிய கனைகளிலே thaamarai,தாமரை - செந்தாமரை மலர்கள் sem thee malarum,செம் தீ மலரும் - சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - அளவுபடாத அன்பையுடையேனான நான் un adi ser vannam,உன் அடி சேர் வண்ணம் - உன் திருவடிகளைச் சேறும்படி arulaay,அருளாய் - அருள்புரிய வேணும். |