Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3327 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3327திருவாய்மொழி || 6-10–உலகம் 2
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-
kodu valla asurar kulam ellaam,கொடு வல்ல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம்
kooru aay,கூறு ஆய் - பலபல கண்டங்களாகி
neeru aay,நீறு ஆய் - சாம்பலாகி
nilan aagi,நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும்
seeraa,சீறா - பின்னையும் சீறி
eriyum,எறியும் - ஜ்வலியா நிற்கிற
thiru nemi valavaa,திரு நேமி வலவா - திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே!
theyvam komaane,தெய்வம் கோமானே - நித்ய ஸூரிநாதனே!
seeru aar sunai,சேறு ஆர் சுனை - சேறு நிரம்பிய கனைகளிலே
thaamarai,தாமரை - செந்தாமரை மலர்கள்
sem thee malarum,செம் தீ மலரும் - சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - அளவுபடாத அன்பையுடையேனான நான்
un adi ser vannam,உன் அடி சேர் வண்ணம் - உன் திருவடிகளைச் சேறும்படி
arulaay,அருளாய் - அருள்புரிய வேணும்.