திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3328 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((வண்ணமருள் கொள்) கீழ்ப்பாட்டில் “உன்னடிசேர் வண்ணமருளாய்“ என்ற ஆழ்வாரை நோக்கி) 3 | வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3 | பதவுரை Show / Hidevannam arul kol,வண்ணம் அருள் கொள் - அருளே வடிவெடுத்த வண்ணமாய் ani paegam vannaa,அணி பேகம் வண்ணா - அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே! maayam ammaane,மாயம் அம்மானே - ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! ennam pugundhu thithikkum amudhae,எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே! imaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதிதேவனே! thel nal aruvi,தெள் நல் அருவி - தெளிந்தழகிய அருவிகள் mani pon muthu,மணி பொன் முத்து - மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் alaikkum,அலைக்கும் - கொழிக்குமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையிலே விளங்குபவனே! annale,அண்ணலே - ஸ்வாமியே! un adi so,உன் அடி சோ - உன் திருவடிகளில் வந்து சேரும்படி adiyerkku,அடியேற்கு - அடியேன் விஷயத்திலே aa aa ennaay,ஆ ஆ என்னாய் - ஐயோ வென்றிரங்கியருள வேணும். |