Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3328 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3328திருவாய்மொழி || 6-10–உலகம் 3
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3
vannam arul kol,வண்ணம் அருள் கொள் - அருளே வடிவெடுத்த வண்ணமாய்
ani paegam vannaa,அணி பேகம் வண்ணா - அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே!
maayam ammaane,மாயம் அம்மானே - ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே!
ennam pugundhu thithikkum amudhae,எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே!
imaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதிதேவனே!
thel nal aruvi,தெள் நல் அருவி - தெளிந்தழகிய அருவிகள்
mani pon muthu,மணி பொன் முத்து - மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும்
alaikkum,அலைக்கும் - கொழிக்குமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையிலே விளங்குபவனே!
annale,அண்ணலே - ஸ்வாமியே!
un adi so,உன் அடி சோ - உன் திருவடிகளில் வந்து சேரும்படி
adiyerkku,அடியேற்கு - அடியேன் விஷயத்திலே
aa aa ennaay,ஆ ஆ என்னாய் - ஐயோ வென்றிரங்கியருள வேணும்.