Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3329 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3329திருவாய்மொழி || 6-10–உலகம் 4
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4
aa aa ennaadhu,ஆ ஆ என்னாது - இரக்கமில்லாமல்
ulagathai alaikkum asurar,உலகத்தை அலைக்கும் - உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான
asurar,அசுரர் - ஆஸுரப்ரக்ருதிகளினுடைய
vaazhnal mel,வாழ்நாள் மேல் - ஆயுளை முடிப்பதற்காக
thee vai vaali,தீ வாய் வாளி - நெருப்பை உமிழ்கிற அம்புகளை
mazhai pozhindha silaiyaa,மழை பொழிந்த சிலையா - மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே!
thiru maa magal kaelva,திரு மா மகள் கேள்வா - திருமகள் கொழுநனே!
theva,தேவா - தேவனே!
surargal munikanangal virumbum,சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் - தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான
thiru vengadathaaney,திரு வேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே!
poo aar kazhalgal,பூ ஆர் கழல்கள் - (உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை
aru vinaiyen,அரு வினையேன் - மஹாபாபியான நான்
porundhum aaru,பொருந்தும் ஆறு - கிட்டும்படி
punaraay,புணராய் - கற்பித்தருளவேணும்