| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3329 | திருவாய்மொழி || 6-10–உலகம் 4 | ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா! தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே! பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4 | aa aa ennaadhu,ஆ ஆ என்னாது - இரக்கமில்லாமல் ulagathai alaikkum asurar,உலகத்தை அலைக்கும் - உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான asurar,அசுரர் - ஆஸுரப்ரக்ருதிகளினுடைய vaazhnal mel,வாழ்நாள் மேல் - ஆயுளை முடிப்பதற்காக thee vai vaali,தீ வாய் வாளி - நெருப்பை உமிழ்கிற அம்புகளை mazhai pozhindha silaiyaa,மழை பொழிந்த சிலையா - மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே! thiru maa magal kaelva,திரு மா மகள் கேள்வா - திருமகள் கொழுநனே! theva,தேவா - தேவனே! surargal munikanangal virumbum,சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் - தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான thiru vengadathaaney,திரு வேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! poo aar kazhalgal,பூ ஆர் கழல்கள் - (உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை aru vinaiyen,அரு வினையேன் - மஹாபாபியான நான் porundhum aaru,பொருந்தும் ஆறு - கிட்டும்படி punaraay,புணராய் - கற்பித்தருளவேணும் |