Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3331 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3331திருவாய்மொழி || 6-10–உலகம் 6
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6
man alandha thaamaraigal inai,மண் அளந்த தாமரைகள் இணை - உலகமளந்த உபயபாதங்களை
naam kaanpadharku ennaal endru,நாம் காண்பதற்கு எந்நாள் என்று - நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று
imaiyor gal,இமையோர்கள் - நித்யஸூரிகள்
ennaalum nindru etti,எந்நாளும் நின்று ஏத்தி - நிரந்தரமாக நின்று துதித்து
eirainji,இறைஞ்சி - வணங்கி
enam enam aay,இனம் இனம் ஆய் - திரள் திரளாக
mei naa manathaal,மெய் நா மனத்தால் - த்ரிகரணங்களாலும்
vazhipaadu seyyum,வழிபாடு செய்யும் - ஆராதனை செய்யுமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே!
adiyen naan,அடியேன் நான் - அடியேனாகிய நான்
mei eydhi,மெய் எய்தி - (கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து
un adikkaL mevuvadhu,உன் அடிக்கள் மேவுவது - உன் திருவடிகளிலே பொருந்துவது
ennaal,எந்நாள் - என்றைக்கோ?