| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3331 | திருவாய்மொழி || 6-10–உலகம் 6 | எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய் மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே! மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6 | man alandha thaamaraigal inai,மண் அளந்த தாமரைகள் இணை - உலகமளந்த உபயபாதங்களை naam kaanpadharku ennaal endru,நாம் காண்பதற்கு எந்நாள் என்று - நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று imaiyor gal,இமையோர்கள் - நித்யஸூரிகள் ennaalum nindru etti,எந்நாளும் நின்று ஏத்தி - நிரந்தரமாக நின்று துதித்து eirainji,இறைஞ்சி - வணங்கி enam enam aay,இனம் இனம் ஆய் - திரள் திரளாக mei naa manathaal,மெய் நா மனத்தால் - த்ரிகரணங்களாலும் vazhipaadu seyyum,வழிபாடு செய்யும் - ஆராதனை செய்யுமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! adiyen naan,அடியேன் நான் - அடியேனாகிய நான் mei eydhi,மெய் எய்தி - (கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து un adikkaL mevuvadhu,உன் அடிக்கள் மேவுவது - உன் திருவடிகளிலே பொருந்துவது ennaal,எந்நாள் - என்றைக்கோ? |