திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3332 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3332திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அடியேன் மேவி) பேறு தப்பாதென்று துணிந்திருத்தல் ஸ்வரூபமாயினும் அத்தலையில் போக்யதை நெஞ்சுக்கு விஷயமாக ஆக, தரித்திருக்க முடியாதபடி பதற வேண்டியிருக்குமே, அந்தப் பதற்றத்தை யருளிச் செய்கிறாரிப்பாட்டில்.) 7
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே! கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே! செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே! நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7
பதவுரை Show / Hide
adiyen mevi amarkindra amudhae,அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே!
emaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதி தேவனே!
adu pul kodi aa udaiyaane,அடு புள் கொடி ஆ உடையானே - (பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே!
kolam kanivai perumaane,கோலம் கனிவாய் பெருமானே - அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே!
chedi aar vinaigal theer marundhae,செடி ஆர் வினைகள் தீர் மருந்தே - செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!
un paadham kaana,உன பாதம் காண - உனது திருவடிகளைக் காண்கைக்கு
noolaadhu,நோலாது - நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே)
nodi aar pozhudhum,நொடி ஆர் பொழுதும் - ஒரு க்ஷண மாத்திரமும்
aatren,ஆற்றேன் - தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன்