திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3333 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3333திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((நோலாதாற்றேன்) ஸாதநாநுஷ்டானம் என் பக்கலில் ஒன்றுமில்லையென்று சொல்லிக்கொண்டே ஆசைப்பட்டு நாக்கு நீட்டினால் கிடைக்குமோ? என்று எம்பெருமான் திருவுள்ள மாகக்கொண்டு தங்களுடைய உபாய தாரித்ரியத்தைச் சொல்லிக் கொண்டன்றோ வந்து உன்னைக் காணப்பெறுகிறது என்கிறார்.) 8
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின் நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே! மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8
பதவுரை Show / Hide
nun unarvin,நுண் உணர்வின் - (ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான
neelaar kandathu ammaanum,நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும்
nirai naanmuganum,நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும்
indiranum,இந்திரனும் - தேவேந்திரனும்
un paadham kaana voodhu aatrennudru,உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு
sael ey kannar palar soozhu,சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து
virumbum,விரும்பும் - விரும்பிப்பணியுமிடமான
maal aay mayakki vandhaay poalae,மால் ஆய் மயக்கி வந்தாய் போலே - மயக்கிக்கொண்டு வந்தாப்போலே
adiyen pal varai,அடியேன் பால் வராய் - அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும்.