Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3333 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3333திருவாய்மொழி || 6-10–உலகம் 8
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8
nun unarvin,நுண் உணர்வின் - (ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான
neelaar kandathu ammaanum,நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும்
nirai naanmuganum,நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும்
indiranum,இந்திரனும் - தேவேந்திரனும்
un paadham kaana voodhu aatrennudru,உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு
sael ey kannar palar soozhu,சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து
virumbum,விரும்பும் - விரும்பிப்பணியுமிடமான
maal aay mayakki vandhaay poalae,மால் ஆய் மயக்கி வந்தாய் போலே - மயக்கிக்கொண்டு வந்தாப்போலே
adiyen pal varai,அடியேன் பால் வராய் - அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும்.